சனீஸ்வரர் கோவில் தேர் அலங்காரம் மும்முரம்

காரைக்காலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சனீஸ்வரர் கோவில் தேர் அலங்காரம் மும்முரமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
சனீஸ்வரர் கோவில் தேர் அலங்காரம் மும்முரம்
Published on

சனீஸ்வரர் கோவில் தேர் அலங்காரம் மும்முரம்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷக ஆராதனைகள் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 6-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்காக 5 தேர்கள் மும்முரமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்களில் பொருத்தப்பட்டுள்ள ஹைட்ராலிக் பிரேக் சரிபார்க்கப்பட்டு பணிகள் முடிவடையும். தேரோட்டம் வரும் சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com