நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மாயம் : மனைவி போலீசில் புகார்

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மாயம் : மனைவி போலீசில் புகார்
Published on

சென்னை,

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரில் தனது கணவரை சிலர் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவரை சில நாட்களாக காணவில்லை, தேடிபிடித்து தருமாறும் ஜூலி புகாரில் கூறி உள்ளார்.

போலீசார் விசாரணை நடத்தியதில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஊட்டிக்கு சென்று இருப்பது தெரிய வந்தது. சொத்து பிரச்சினை காரணமாக அவர் விரக்தியில் ஊட்டிக்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com