காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் சாதித்த தமிழக வீரர்: நடிகை சிம்ரன் நேரில் பாராட்டு

கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்ட அவர், எதிர்காலத்தில் ஒலிம்பிக் உள்ளிட்ட மேலும் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று சிம்ரன் கூறினார்.
பளு தூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு நடிகை சிம்ரன் வாழ்த்து.
சிம்ரன் - ராஜா முத்துப்பாண்டி
Published on

சென்னை,

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியை, பிரபல திரைப்பட நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டி

சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி, சிறப்பான திறமையை வெளிப்படுத்தி நாட்டிற்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். சர்வதேச அரங்கில் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த இந்த சாதனை வீரரை, நடிகை சிம்ரன் இன்று (புதன்கிழமை) நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து

இதுகுறித்து பேசிய நடிகை சிம்ரன், "காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று நாட்டின் பெருமையை உலகறியச் செய்த ராஜா முத்துப்பாண்டிக்கு எனது வாழ்த்துகள். இந்த வெற்றி ஒரு தொடக்கம் மட்டுமே. கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்ட அவர், எதிர்காலத்தில் ஒலிம்பிக் உள்ளிட்ட மேலும் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளைப் படைக்க வேண்டும்" என்று கூறினார். சர்வதேச அரங்கில் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு, திரைத்துறை பிரபலங்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com