"கள்ள ஓட்டு போட்டாலும் விடமாட்டேன்" - விடாமுயற்சியுடன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய நடிகை

பிரபல நடிகை அக்சயா ஹரிஹரனுக்கு நேர்ந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"கள்ள ஓட்டு போட்டாலும் விடமாட்டேன்" - விடாமுயற்சியுடன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய நடிகை
Published on

சென்னை,

தனது வாக்கை யாரோ செலுத்திவிட்டதாகப் புகார் அளித்திருந்த நடிகை அக்சயா ஹரிஹரன், மாற்று ஏற்பாட்டின் மூலம் ('டெண்டர் ஓட்டு') தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

வழக்கமாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பொத்தானை அழுத்தி வாக்களிக்கும் அந்த மனநிறைவு, இதில் கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Also Read
எப்போது வெளிவந்தாலும் அமர்க்களம் அமர்க்களம்தான் - வைரமுத்து
"கள்ள ஓட்டு போட்டாலும் விடமாட்டேன்" - விடாமுயற்சியுடன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய நடிகை

தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்திற்குப் பிறகும், விடாமுயற்சியுடன் தனது வாக்கை உறுதி செய்த அக்ஷயா, மற்றவர்களையும் வாக்களிக்கத் தூண்டிணார். நடிகை அக்சயாவின் இந்த விடாமுயற்சியும், வாக்களிப்பதன் அவசியம் குறித்த அவரது விழிப்புணர்வுப் பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான அக்சயா ஹரிஹரன், நேற்று காலை அடையாரில் உள்ள தனது வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் சென்றார். வரிசையில் நின்று தனது அடையாள அட்டைகளைக் காண்பித்தபோது, அங்கிருந்த தேர்தல் ஊழியர்கள் அவருடைய வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டதாக கூறி உள்ளனர். இதனால் திகைத்துப்போன அக்சயா, பின்னர் சுமார் ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு, தேர்தல் விதிமுறைகளின்படி அவர் 'டெண்டர் ஓட்டு' (Tendered Vote) அளிக்க அனுமதிக்கப்பட்டார்.

அக்சயா ஹரிஹரன் 'புளடி பெக்கர்' (Bloody Beggar) மற்றும் 'சத்யா' (Satya) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com