

மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்த நடிகை சுவேதா மேனன், தற்போது தனது சமூக வலைதள பதிவு மூலம் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், கேரள அரசால் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் தொல்லை, சுரண்டல் மற்றும் பெண்களுக்கு எதிரான பணியிட பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளில் இடம்பெற்ற வலிமையான நபர்களுக்கு எதிராகவே தாம் போராடி வருவதாக சுவேதா மேனன் தெரிவித்துள்ளார்.
மேலும், "நான் இருக்கும் வரை அந்த நபர்கள் எந்த சூழ்நிலையிலும் 'அம்மா' தலைவர் பதவியில் அமர்ந்துவிடக் கூடாது. அதைத் தடுக்க எந்த எல்லைக்கும் செல்வேன்" என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரு தேசிய அரசியல் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்ய தனக்கு கோடிக்கணக்கான ரூபாய் வழங்கியதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும் சுவேதா மேனன் மறுப்பு தெரிவித்துள்ளார்.