

ஐதராபாத்,
நடிகர் அல்லு அர்ஜுன், தனது ரசிகர்களுக்காக ரூ.5 லட்சம் மதிப்பில் விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ரசிகர்கள் தங்களது நேரத்தையும் ஆற்றலையும் சமூக வலைதளங்களில் சண்டையிடுவதற்காக வீணடிக்காமல், சுய முன்னேற்றம், குடும்ப நலன் மற்றும் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று அல்லு அர்ஜுன் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்காக புதிய விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தார். அதன்படி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடும், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 900-க்கும் மேற்பட்ட ரசிகர் மன்ற உறுப்பினர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
சினிமாவுக்கு அப்பாற்பட்டு ரசிகர்களின் எதிர்காலம் மற்றும் நலனில் அக்கறை காட்டி பேசிய அல்லு அர்ஜுனின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், அல்லு அர்ஜுன் தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'ராக்கா' படத்திலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.