சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் - நடிகை பூமிகா

சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் - நடிகை பூமிகா
Published on

தமிழில் விஜய் ஜோடியாக பத்ரி, சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் மற்றும் ரோஜா கூட்டம் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பூமிகா. தெலுங்கு, இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சிறிய இடைவெளி விட்டு தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பூமிகா அளித்துள்ள பேட்டியில், "இந்தியில் என் முதல் படம் தேரே நாம். சல்மான் கான் ஜோடியாக நடித்தேன். அந்த படம் வெற்றி பெற்றதும் ஒரு பெரிய பட நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்தது. ஓகே செய்தேன். ஆனால் தயாரிப்பாளர் மாறியதால் என்னை நீக்கி விட்டனர். அந்தப் படத்திற்காக ஒரு ஆண்டு முழுவதும் வேறு எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் காத்திருந்தேன். அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அதைவிட இன்னும் அதிகமாக வேதனைப்படுத்திய சம்பவம் என்னவென்றால். ஜப் வி மெட் படத்தில் முதலில் என்னை ஒப்பந்தம் செய்தார்கள். பிறகு கரீனா கபூர் அந்த படத்தில் நடித்தார். என்னை நீக்கி விட்டனர்.

அதேபோல முன்னாபாய் எம்.பி.பி.எஸ் படத்திலும் நான் கையெழுத்திட்டேன். ஆனால் அந்த படத்தில் இருந்தும் என்னை நீக்கி விட்டார்கள். மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலும் முதலில் என்னை ஒப்பந்தம் செய்தனர். கடைசியில் கை விரித்து விட்டார்கள்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com