

கட்டாகுஸ்தி 2 பட நிகழ்வில் நடிகர் விஷ்ணு விஷால் பேசியதாவது: இன்டர்வியூவில் என்னிடம் ஒரு கமெண்ட் பற்றி கேட்டார்கள். அதற்கு விளக்கம் அளிக்கும்பொழுது ரஜினிகாந்த் சாரை எடுத்துக்காட்டாக கூறி பதில் அளித்தேன். யாரையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை. அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாருக்கே ஒரு விளக்கம் தர வேண்டி இருக்கிறது அதுதான் வருத்தம் அளிக்கிறது. இது போன்ற ஒரு சூழலை சோசியல் மீடியா ஏற்படுத்துகிறது
சமூக வலைத்தளத்தில் முதலில் யார் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்களோ அது உண்மையாக்கப்பட்டு விடுகிறது. அதற்கு நாம் பதிலளிக்கவில்லை என்றால் அதுவே உண்மையாகி விடுகிறது அனைவருக்கும் சுதந்திரம் எப்படி இருக்கிறதோ அதே சுதந்திரம் தான் நடிகர்களுக்கும் உள்ளது. அப்படி இருக்கும் பொழுது நடிகர்கள் நாங்கள் பேசினால் மட்டும் அது பெரிதாகி விடுகிறது அது ஏன்?” என்று கூறியுள்ளார்.