சிறப்பு காட்சிக்கு அனுமதி: உதயநிதி ஸ்டாலினுக்கு 'கோட்' படத்தின் தயாரிப்பாளர் நன்றி

சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியதற்கு தமிழக அரசுக்கும் , அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்துள்ளார்.
சிறப்பு காட்சிக்கு அனுமதி: உதயநிதி ஸ்டாலினுக்கு 'கோட்' படத்தின் தயாரிப்பாளர் நன்றி
Published on

சென்னை,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் , 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். விஜய்யுடன், பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் இருப்பதால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர். தி கோட் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரப்பட்டநிலையில், நாளை ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளை காலை 9 மணிக்கு தொடங்கி 5 காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

இந்த நிலையில், சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியதற்கு தமிழக அரசுக்கும் , அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் 'கோட்' படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

'கோட்' படத்தின் சிறப்பு கட்சிக்கு அனுமதி வழங்கி எப்போதும் போல் சினிமாவை ஆதரிப்பதற்கு தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி. என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com