ரூ.3,400 கோடி சொத்தை நன்கொடையாக அளித்த ஜாக்கி சான்


ரூ.3,400 கோடி சொத்தை நன்கொடையாக அளித்த ஜாக்கி சான்
x
தினத்தந்தி 26 May 2025 4:33 PM IST (Updated: 26 May 2025 5:51 PM IST)
t-max-icont-min-icon

ஏழை மக்களின் படிப்புக்காகவும், இயற்கை பேரிடருக்காகவும் தனது சொத்துக்களை ஜாக்கி சான் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

'90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக திகழ்பவர் நடிகர் ஜாக்கி சான். இவர் 'தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபல மானவர். புரூஸ் லீ-க்கு பிறகு அதிரடி ஆக்சன் காட்சிகளால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர், ஜாக்கிசான். இவரின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கிடையில் தற்போது ஜாக்கி சான் 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 30-ந் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில் ஜாக்கிசான் தனது சொத்தை நன்கொடையாக அளித்துள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் தனது ரூ.3,400 கோடி சொத்துக்களை ஏழை மக்களின் படிப்புக்காகவும், இயற்கை பேரிடர்களுக்கும் தனது ஜாக்கிசான் சாரிடபிள் பவுண்டேஷன் மூலம் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "சிறிய வயதில் வறுமையால் தவித்திருக்கிறேன். அந்த கஷ்டம் எனக்கு தெரியும். நான் பட்ட கஷ்டங்கள் மற்றவர்கள் படக்கூடாது என்பதால்தான் இந்த முயற்சி. மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது வரும் சந்தோஷம் அளவிட முடியாதது'', என்று குறிப்பிட்டார். ஏழை மக்களுக்காக தனது சொத்துக்களை வழங்கியுள்ள ஜாக்கிசானுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

1 More update

Next Story