3 நாட்களில் ரூ.70 கோடி வசூலித்த பவன் கல்யாணின் “உஸ்தாத் பகத் சிங்”

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத் சிங்’ படம் கடந்த 19ம் தேதி வெளியானது.
3 நாட்களில் ரூ.70 கோடி வசூலித்த பவன் கல்யாணின் “உஸ்தாத் பகத் சிங்”
Published on

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.ஆந்திர மாறில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வராகவும் பொறுப்பில் உள்ளார்.

துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு சில மாதங்களாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார் பின்னர் தயாரிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு ஹரிஹர வீர மல்லு, ஓஜி ஆகிய படங்களில் நடித்திருந்தார். ‘ஓஜி’ படம் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

மைத்ரி மூவி மேக்கரஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தை ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கப்பர் சிங்’ படத்திற்குப் பிறகு பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இரண்டாவது படம் இது. தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா, ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் பவன் கல்யாண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தணிக்கை வாரியம் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியது. இப்படத்தின் டிரெய்லரை சிரஞ்சீவி பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ படம் 3 நாட்களில் ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com