ஜெயசூர்யாவின் 'ஆபரேஷன் டிரால்' - மலையாளத்தில் தடம் பதிக்கும் ரித்திகா சிங்

'இறுதி சுற்று' படத்தின் மூலம் புகழ்பெற்ற ரித்திகா சிங், இந்தத் திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார்.
ஜெயசூர்யாவின்  'ஆபரேஷன் டிரால்' - மலையாளத்தில் தடம் பதிக்கும் ரித்திகா சிங்
Published on

சென்னை,

மலையாள நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் ராணுவப் பின்னணியில் உருவாகும் அதிரடித் திரைப்படமான 'ஆபரேஷன் டிரால்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இத்துடன் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்கள் குறித்த விபரங்கள் மற்றும் ஒரு மாஸான மோஷன் போஸ்டரையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

'இறுதி சுற்று' படத்தின் மூலம் புகழ்பெற்ற ரித்திகா சிங், இந்தத் திரைப்படத்தின் மூலம் முழு நீளக் கதாபாத்திரத்தில் முதன்முறையாக மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார். இவர் இதற்கு முன்பு துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கோதா' படத்தில் ஒரு சிறப்புப் பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். இவர்களுடன் வினய் ராய், 'அனேகன்' படப் புகழ் அமைரா தஸ்தூர், சித்திக், சாய் குமார், நந்து மற்றும் அன்சன் பால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Also Read
தெலுங்கில் தடம் பதிக்கும் நர்கிஸ் பக்ரி - வெளியான கிளாமர் சாங் போஸ்டர்
ஜெயசூர்யாவின்  'ஆபரேஷன் டிரால்' - மலையாளத்தில் தடம் பதிக்கும் ரித்திகா சிங்

இத்திரைப்படத்தின் மூலம் பிரபல இசை அமைப்பாளர் ரதீஷ் வேகா இயக்குனராக அறிமுகமாகிறார். அவரே இப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். இதில் நடிகர் ஜெயசூர்யா தேசிய புலனாய்வு முகமையின் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்தியாவின் சில முக்கியமான உயர்தர உளவுத்துறை ரகசிய ஆபரேஷன்களை அடிப்படையாகக் கொண்டு இக்கதை ஈர்க்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். குட்வில் எண்டர்டெய்ன்மென்ட்ஸ் பேனரின் கீழ் ஜோபி ஜார்ஜ் தடதில் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com