

சென்னை:
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிப்தி டிம்ரி, சமீபத்திய பேட்டியில் தன்னம்பிக்கை குறித்த தனது கருத்துகளை பகிர்ந்து கவனம் ஈர்த்துள்ளார்.
பல ஆண்டுகளாக இந்தி திரையுலகில் நடித்துவரும் திரிப்தி டிம்ரிக்கு, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ‘அனிமல்’ (2023) திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.
‘அனிமல்’ வெற்றிக்குப் பிறகு திரிப்திக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: “தன்னம்பிக்கை மற்றும் நேர்மையே ஒருவருக்கு உண்மையான அழகை தருகின்றன. வெளிப்புற அழகை விட உள்ளார்ந்த அமைதியே முக்கியம்,” என்று கூறினார்.