தமிழ்நாட்டில் விஜய்யின் “ஜனநாயகன்” திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ்நாட்டில் விஜய்யின் “ஜனநாயகன்” திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
Published on

சென்னை,

‘ஜனநாயகன்’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும்.

முதலில் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம், சென்சார் பிரச்சினையால் தள்ளிப்போனது. பின்னர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், மீண்டும் சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தள்ளிப்போனது.

படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்

இதையடுத்து, சமீபத்தில் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், படத்தில் சில காட்சிகளை நீக்கவும், சிலவற்றை மாற்றியமைக்கவும் தணிக்கை வாரியம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஜூலை 23-ல் ரிலீஸ்

‘ஜனநாயகன்’ திரைப்படம் வருகிற 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் ஓட்ட நேரம் 183 நிமிடங்கள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு முன்னரே அண்டை மாநிலங்களில் முன்பதிவு தொடங்கியது. ‘ஜனநாயகன்’ படம் உலகம் முழுவதும் 3,000-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com