

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட மேலும் 12 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 32 ஆயிரத்து 740 ஆனது. அதேபோல் 12 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 979 ஆனது. நேற்றைய நிலவரப்படி 124 பேர் சிகிச்சையில் உள்ளனர்.