

புதுச்சேரி
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 68 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
நேற்று ஒருவர் மட்டும் குணம் அடைந்தார். தற்போது 22 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று முதல் தவணை தடுப்பூசியை 4 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 22 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 9 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 17 லட்சத்து 960 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.