மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று

மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று
மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று
Published on

திருச்சி, ஆக.29-
திருச்சி மாவட்டத்தில் நேற்று 55 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 74,165 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 566 பேர் உள்ளனர். 63 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 72,596 ஆகும். கொரோனாவுக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,004 ஆக உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 4,816 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. மேலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 18,591 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். அவர்களில் முதல் டோஸ் தடுப்பூசி 13,485 பேரும், 2-ம் டோஸ் 5,106 பேரும் போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com