பேச்சுத் திறமையால் மனங்களை கவரும் ஸ்ரீநிதி ஆழ்வார்
திருக்குறள் ஒப்புவிப்பது, தமிழ் இலக்கணங்கள் கற்பது ஆகியவற்றில் ஸ்ரீநிதிக்கு விருப்பம் அதிகம். எந்தவித தயக்கமும் இல்லாமல் மற்றவர்கள் முன் இவர் பேசுவதைக் கவனித்த பெற்றோர் சிறிது சிறிதாக பயிற்சி கொடுக்க ஆரம்பித்தனர். இதற்கு ஸ்ரீநிதி ஆர்வத்துடன் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்.