கொல்கத்தா மலாய் சந்தேஷ்


கொல்கத்தா மலாய் சந்தேஷ்
x
தினத்தந்தி 9 July 2023 1:30 AM GMT (Updated: 9 July 2023 1:31 AM GMT)

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய பன்னீர் பர்பி, கொல்கத்தா மலாய் சந்தேஷ் போன்றவற்றை வீட்டிலேயே தயாரிக்கும் விதம் குறித்து பார்ப்போம்.

கொல்கத்தா மலாய் சந்தேஷ்

தேவையான பொருட்கள்:

கொழுப்பு நீக்காத பால் - 2 லிட்டர்

எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை அல்லது வெல்லம் - ½ கப்

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

மலாய் தயாரிக்க:

கொழுப்பு நீக்காத பால் - 1 லிட்டர்

ரோஸ் வாட்டர் - 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி, பிஸ்தா, பாதாம் - ¼ கப் (பொடிதாக நறுக்கியது)

குங்குமப்பூ - ½ டீஸ்பூன்

சர்க்கரை - ¼ கப்

செய்முறை:

2 லிட்டர் பாலை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். அது நன்றாகக் கொதிக்கும்போது அதில், எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றி கிளறவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு பால் திரியத் தொடங்கும். அது முழுவதுமாக திரிந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். பின்பு இந்தப் பாலை சுத்தமான மெல்லிய பருத்தித் துணியில் ஊற்றி வடிகட்டவும். துணியில் தங்கி இருக்கும் பன்னீரை மூட்டையாகக் கட்டவும். அதன் மேல் கனமான பாத்திரத்தை வைத்து தண்ணீர் முழுவதுமாக வடியும்படி செய்யவும். பின்பு அந்த பன்னீருடன் பொடித்த சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து நன்றாகப் பிசையவும். இதை வடமாநிலத்தில் 'சந்தேஷ்' என்று குறிப்பிடுவார்கள்.

பின்னர் அடி கனமான, அகலமான பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும். பால் நன்றாகக் கொதித்து பாதி அளவாக வற்றியதும், அதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி,

குங்குமப்பூ, ரோஸ்வாட்டர் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பிறகு அதில் தயாரித்து வைத்திருக்கும் சந்தேஷை உதிர்த்துப் போட்டு நன்றாகக் கிளறவும். இந்தக் கலவை கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற வைக்கவும். பின்னர் விரும்பிய வடிவில் வெட்டி முந்திரி, பாதாம், பிஸ்தா கலவையை அதன் மேல் தூவி பரிமாறவும்.


பன்னீர் பர்பி

தேவையான பொருட்கள்:

துருவிய பன்னீர் - 400 கிராம்

கண்டென்ஸ்டு மில்க் - 300 கிராம்

சர்க்கரை - ¼ கப்

பால் பவுடர் - ½ கப்

கொழுப்பு நீக்காத பால் - ½ கப்

ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும். பால் கொதிக்கத் தொடங்கியதும் அதில் துருவிய பன்னீரை சேர்த்துக் கிளறவும். இந்தக் கலவை கெட்டியாக ஆரம்பித்ததும் அதில் கண்டென்ஸ்டு மில்க்கை ஊற்றி கலக்கவும். பின்பு மில்க் பவுடர், சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகியவற்றை போட்டு கட்டிகள் உருவாகாதவாறு கலக்கவும். கலவை நன்றாக கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கவும். நெய் தடவிய தட்டில் இந்தக் கலவையைக் கொட்டி சமமாக பரப்பி விடவும். அது ஆறியதும் தட்டோடு குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும். 30 நிமிடங்கள் கழித்து வெளியில் எடுத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அவற்றின் மேல் நறுக்கிய பாதாம், முந்திரி ஆகியவற்றை தூவி அலங்கரிக்கவும்.


Next Story