

திருப்பதி,
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற இந்து மதக்கடவுள் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு தினமும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மனைவி சவுமியா அன்புமணி மற்றும் மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகளுடன் அன்புமணி ராமதாஸ் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.