

ஸ்ரீகாளஹஸ்தி,
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் இலவச பஸ் இயக்கப்படுகிறது. அந்தப் பஸ் கைலாச சதன், கங்கா சதனில் இருந்து அதிகாலை 3 மணியில் இருந்து காலை 8 மணி வரையிலும், மாலை 5.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் இயக்கப்படுகிறது. கோவிலின் 4-வது வாயில், ரெயில் நிலையம், வரதராஜசாமி விருந்தினர் மாளிகை, அரசு பஸ் நிலையம், பக்த கண்ணப்ப சதன், 1-வது வாயில், 4-வது வாயில் மற்றும் கைலாச தனம், கங்கா சதன் விருந்தினர் மாளிகை ஆகிய பகுதிகளுக்கு இந்த பஸ் இயக்கப்படுகிறது.
அதேபோல் காலை 9 மணியில் இருந்து மதியம் 12.00 மணி வரையிலும், மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலும் கைலாச சதன், கங்கா சதன் முதல் 4-வது கேட், 1-வது கேட், அரசு பஸ் நிலையம், வி.எம்.சி. சர்க்கிள், பக்த கண்ணப்ப சதன், 1-வது கேட், 4-வது கேட் வரை இலவச பஸ் இயக்கப்படுகிறது.
இலவச பஸ் வசதியை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும், என கோவில் செயல் அலுவலர் வெங்கடேசுலு தெரிவித்துள்ளார்.