ஸ்ரீரங்கம் ஆடிப்பூர உற்சவம் 5-வது நாள்... துவாரகை கண்ணன் திருக்கோலத்தில் அருள்பாலித்த ஆண்டாள்

துவாரகை கண்ணன் திருக்கோலத்தில் காட்சியளித்த ஆண்டாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரங்நாதர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
மூலவர்-துவாரகை கண்ணன் திருக்கோலம், உற்வவர்- அழகர் திருக்கோலம்
Published on

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் திரு ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருக்கோயிலில் உள்ள பரமபத நாதர் சன்னதியில் நடைபெற்று வரும் இந்த உற்சவத்தில், தினமும் வெவ்வேறு திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அவ்வகையில் ஆடிப்பூரம் உற்சவத்தின் 5ம் நாளான நேற்று (09.08.2026) மூலவர் துவராபதி கண்ணன் (துவாரகை கண்ணன்) திருக்கோலத்திலும், உற்சவர் சோலைமலை பெருமாள் (திருமாலிருஞ்சோலை அழகர்) திருக்கோலத்திலும் எழுந்தருளி சேவை சாதித்தார். இந்த சிறப்பு திருக்கோல காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் மேல அடையவளஞ்சான் வீதி ஸ்ரீ வெளி ஆண்டாள் சன்னதியில் ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் வெளி ஆண்டாள் சன்னதியில் பரகால நாயகி திருக்கோலத்தில் அருள்பாலித்த ஆண்டாள்

இதேபோல் ஸ்ரீரங்கம் ஸ்ரீ வெளி ஆண்டாள் சன்னதியிலும் ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது. தினமும் ஒவ்வொரு திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். 5ம் நாளான நேற்று (09.08.2026) ஆண்டாள் நாச்சியார், பரகால நாயகி திருக்கோலத்தில் சேவை சாதித்தார். இதனை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com