

ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் திரு ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருக்கோயிலில் உள்ள பரமபத நாதர் சன்னதியில் நடைபெற்று வரும் இந்த உற்சவத்தில், தினமும் வெவ்வேறு திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அவ்வகையில் ஆடிப்பூரம் உற்சவத்தின் 6ம் நாளான இன்று (10.08.2026) மூலவர் திருமாலிருஞ்சோலை பரம சுவாமி திருக்கோலத்திலும், உற்சவர் அழகர் திருக்கோலத்திலும் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். இந்த சிறப்பு திருக்கோல காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஸ்ரீரங்கம் மேல அடையவளஞ்சான் வீதி ஸ்ரீ வெளி ஆண்டாள் சன்னதியிலும் ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.