ஸ்ரீரங்கம் ஆடிப்பூர உற்சவம் 8ம் நாள்.. ஆராவமுதன் அலங்கார சேவை

ஆடிப்பூர உற்சவத்தில் தினமும் ஒவ்வொரு திருக்கோலத்தில் ஆண்டாள் அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெற்றது
ஆராவமுதன் அலங்கார சேவை
Published on

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் திரு ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருக்கோயிலில் உள்ள பரமபத நாதர் சன்னதியில் நடைபெற்று வரும் இந்த உற்சவத்தில், தினமும் வெவ்வேறு திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஆராவமுதன் திருக்கோலம்

அவ்வகையில் ஆடிப்பூரம் உற்சவத்தின் 8ம் நாளான இன்று (12.08.2026) மூலவர் ஆராவமுதன் திருக்கோலத்திலும், உற்சவர் குறும்பு செய்வானோர் மகன் திருக்கோலத்திலும் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

இதேபோல் ஸ்ரீரங்கம் மேல அடையவளஞ்சான் வீதி ஸ்ரீ வெளி ஆண்டாள் சன்னதியிலும் ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் ஆண்டாளுக்கு சிறப்பு ஆரத்தி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com