தை மாத பிரதோஷ வழிபாடு: தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தை மாத பிரதோஷ வழிபாடு: தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ வழிபாட்டின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.

Also Read
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு.. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
தை மாத பிரதோஷ வழிபாடு: தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

இந்த நிலையில், தை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் மகாநந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com