புனேக்கு சுற்றுலா வந்த தந்தை, மகள் தண்ணீரில் மூழ்கி பலி

புனேக்கு சுற்றுலா வந்த தந்தை, மகள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
புனேக்கு சுற்றுலா வந்த தந்தை, மகள் தண்ணீரில் மூழ்கி பலி
Published on

புனே, 

புனேக்கு சுற்றுலா வந்த தந்தை, மகள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

சுற்றுலா

புனே போர் தாலுகா பாசுரே கிராமத்திற்கு சிரிஷ் தர்மாதிகாரி (வயது45) என்பவர் தனது மனைவி, மகள் ஐஸ்வர்யா (13) மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தார். அங்கிருந்த பாட்கர் அணையில் சிரிஷ் தர்மாதிகாரி நீந்தி குளிக்க மகள் ஐஸ்வர்யாவை உடன் அழைத்து சென்றார். தண்ணீரில் விளையாடி கொண்டிருந்த அவர் தனது மகளுடன் உள்ளே மூழ்கினர். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் உதவி கேட்டு சத்தம் போட்டனர்.

தந்தை, மகள் பலி

இதன்பேரில் மீட்பு படையினர் அங்கு சென்று அணையில் மூழ்கிய 2 பேரையும் மீட்க போராடினர். மாலையில் சிறுமி ஐஸ்வர்யாவின் உடலை மீட்டனர். இரவு நேரமானதால் சிரிஷ் தர்மாதிகாரியை மீட்க முடியவில்லை. நேற்று காலை தேடிய போது அவரது உடலும் மீட்கப்பட்டது. இதுகுறித்து போர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com