

வில்லியனூர்
ஊசுடு தொகுதியில் தொடர் நோயால் பாதிக்கப்பட்ட 22 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நிதி உதவி பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் சாய்.சரவணன்குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நிதியுதவி பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பா.ஜ.க. ஊசுடு தலைவர் சாய்.தியாகராஜன், ஆதிதிராவிடர் நலத்துறை பொறுப்பாளர் ஜெகதல பிரதாபம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.