தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை

மூலக்குளம் அருகே திருமணம் ஆன 8 மாதத்தில் தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் என தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை
Published on

மூலக்குளம்

மூலக்குளம் அடுத்த பிச்சைவீரன்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துளசி (வயது 41). அவரது மகள் மதுபாலா (வயது 19). இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன் லேம்பார்ட் சரவணன் நகரை சேர்ந்த வசந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் வசந்தகுமாரின் குடும்பத்தினர் அவரை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த மதுபாலா நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே மதுபாலாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரெட்டியார்பாளையம் போலீசில் மதுபாலாவின் தாயார் துளசி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com