விரைவில் உருவாகும் புதிய பாதை -2.. வைரலாகும் பார்த்திபன் பதிவு

இயக்குனர் பார்த்திபன் தற்போது புதிய படம் இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார். இப்படம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விரைவில் உருவாகும் புதிய பாதை -2.. வைரலாகும் பார்த்திபன் பதிவு
Published on

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில், "மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். புதிய பாதை எத்தனை மொழிகளில் முறையான அனுமதியின்றி எடுக்கப் பட்டிருந்தாலும் மகிழ்ச்சி" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர் "புதிய பாதை" படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும்" என்று கமெண்ட் செய்திருந்தார். இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள பார்த்திபன், "தற்போது தயாராகிவரும் படம் (தலைப்பு-any guess?)முடிந்ததும் PP2 தயாராகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

1989-ஆம் ஆண்டு வெளியான "புதிய பாதை" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். இந்த படத்தில் சீதா, மனோரமா, வி.கே.ராமசாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் பல மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com