ரே‌‌ஷன் கார்டில் பெயர் சேர்க்க-நீக்கம் செய்யலாம் சென்னையில் 17 இடங்களில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடக்கிறது

சென்னையில் உள்ள 17 மண்டல உதவி கமி‌‌ஷனர் அலுவலகங்களில் இன்று பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் வகையில் மார்ச் மாதத்துக்கான மாதாந்திர பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம், சென்னையில் உள்ள 17 மண்டல உதவி கமிஷனர் அலுவலகங்களில் இன்று(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் செல்போன் எண் பதிவு செய்தல் போன்ற மாற்றங்களையும், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.

தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் இருந்தால் அவற்றை இந்த முகாமில் தெரிவிக்கலாம். பொதுமக்கள் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com