கர்நாடகாவில் புதிதாக 1,925 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத் துறை தகவல்

கர்நாடகாவில் புதிதாக 1,925 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Published on

பெங்களூரு,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும் 1,925 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 23,474 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் 37 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 372 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 603 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 9,847 பேர் குணமடைந்துள்ளதாகவும், 13,251 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com