பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு காரில் கடத்தப்பட்ட 200 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது

பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு காரில் கடத்தப்பட்ட 200 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on

ஊத்தங்கரை,

ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 6 மூட்டைகள் இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com