திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் மேலும் ஒருவர் சேர்ப்பு 13 பேர் கண்காணிப்பு

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் மேலும் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கண்காணிப்பில் இருக்கிறவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் மேலும் ஒருவர் சேர்ப்பு 13 பேர் கண்காணிப்பு
Published on

திருப்பூர்,

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

அதன்படி நாடு முழுவதும் 5-வது கட்ட ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்கள் மற்றும் கொரோனா சந்தேகத்தின் பேரில் உள்ளவர்களுக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் நேற்று முன்தினம் வரை 12 பேர் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்த வார்டில் நேற்று ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

13 பேர் கண்காணிப்பு

இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டம் முழுவதும் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று உள்ளவர்கள் மற்றும் கொரோனா தொற்று சந்தேகம் இருக்கிறவர்கள் சிகிச்சை பெற அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு தனியாக அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வார்டில் 12 பேர் நேற்று முன்தினம் வரை கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார். கொரோனா சந்தேகத்தின் பேரில் இவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்த வார்டில் 13 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் 10 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் .

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com