சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த தீட்சிதர் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த தீட்சிதர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

சிதம்பரம்,

சிதம்பரம் வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி. இவருடைய மனைவி லதா (வயது 51). இவர் ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் ராஜேசுக்கு(21) நேற்று முன்தினம் பிறந்த நாள். இதற்காக லதா, சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

தெற்கு கோபுரம் அருகே உள்ள முக்குருணி விநாயகர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு இருந்த சிதம்பரத்தை சேர்ந்த தீட்சிதர் தர்ஷன் என்பவரிடம் அர்ச்சனைக்காக கொண்டு வந்த கூடையை கொடுத்தார். அப்போது லதா, தனது மகன் பெயர் மற்றும் ராசி, நட்சத்திரத்தை கூறுவதற்குள் தீட்சிதர் தர்ஷன் கருவறைக்குள் சென்று, அர்ச்சனை செய்து முடித்துவிட்டு வெளியே வந்துவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com