ஊரக பகுதிகளிலும் தி.மு.க. கொடி கட்டி பறக்கிறது கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

உள்ளாட்சி தேர்தலில் பெரிய வெற்றி பெற்று, ஊரக பகுதிகளிலும் தி.மு.க. கொடி கட்டி பறக்கிறது என்று சென்னையில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து, மு.க.ஸ்டாலின் பேசினார்.
Published on

சென்னை,

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் மார்பளவு சிலை திறப்பு விழா, கருணாநிதி கணினி கல்வியகம் என்ற திறன் மேம்பாட்டு மையத்தின் தொடக்க விழா ஆகியவை சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள தி.மு.க. அலுவலகத்தின் அருகே நேற்று நடந்தது. விழாவுக்கு, சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com