மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.2.54 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
Published on

சிவகங்கை,

சிவகங்கை தாலுகா கீழக்கோட்டை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசு மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அரசு முதன்மை அலுவலாகளை கொண்டு மக்கள் தொடர்பு முகாம் வாரந்தோறும் கிராமப்பகுதிகளில் நடைபெறுகிறது.

அதன்படி சிவகங்கை வட்டம், மதகுபட்டி ஊராட்சி, கீழக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களில் தகுதியுடைய மனுதாராகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

மீதமுள்ள மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்

தொடர்ந்து நிகழ்ச்சியில் 195 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 54 லட்சத்து 38 ஆயிரத்து 647 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com