100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு

பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவதும் குறித்தும், வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியின் செயல்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு
Published on

அரியலூர்,

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் மக்கள் வாக்களிக்க வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட பிராஞ்சேரி கிராமத்தில் பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவதும் குறித்தும், வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியின் செயல்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட சிலம்பூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு 100 சதவீதம் மக்கள் வாக்களிக்க வேண்டுமென தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் கதிரேசன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com