தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை

Published on

சங்க காலம் தொட்டு தமிழரின் கப்பல் கட்டும் வரலாறு நீண்ட நெடிய மரபைக் கொண்டது. தமிழரின் இத்தகைய கடல்சார் மரபை மீட்டெடுத்திடவும், தமிழ்நாட்டை உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக நிறுவிடவும், 'தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை 2025' ஒன்றை அரசு அறிமுகப்படுத்தும். கப்பல் மற்றும் படகு வடிவமைப்பு மற்றும் கப்பல் சட்டகம் கட்டுருவாக்கம் (Ship Hull Fabrication) மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தி (Ship Engine Production) ஆகிய துறைகளில் முதலீடு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கங்களைக் கொண்டு இப்புதிய கொள்கை அமைந்திடும். இந்தத் தொழிலின் வருகையின் மூலம், கடலூர் மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 30,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை வளர்ச்சிக்கும் இக்கொள்கை வித்திடும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com