ஓசூர், விருதுநகரில் புதிய மினி டைடல் பூங்கா


ஓசூர், விருதுநகரில் புதிய மினி டைடல் பூங்கா
தினத்தந்தி 14 March 2025 10:54 AM IST (Updated: 14 March 2025 10:54 AM IST)
t-max-icont-min-icon

25 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் டைடல் பூங்காவை அமைத்து தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்ட, நவீன தமிழ்நாட்டின் சிற்பியான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்துத் தந்த தகவல் நெடுஞ்சாலையில், தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களும் இணைந்து பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஓசூரில் 5 இலட்சம் சதுர அடி பரப்பளவில் உயர்தர அலுவலக வசதிகளைக் கொண்டு, 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றும், விருதுநகர் மாவட்டத்தில் புதிய மினி டைடல் பூங்கா ஒன்றும் அமைக்கப்படும். இதன்மூலம் 6,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.


Next Story