ஸ்கூட்டர் மீது கார் மோதி - தனியார் நிறுவன ஊழியர் சாவு

குன்றத்தூர் நோக்கி வேகமாக வந்த கார், ஸ்கூட்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூரம் தூக்கி வீசப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
Published on

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், நடேசன் நகரை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 49). மருத்துவத்துறையில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். நேற்று வண்டலூரில் பணியை முடித்துவிட்டு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் அருகே சர்வீஸ் சாலையோரம் உள்ள கடையில் டீ குடிப்பதற்காக ஸ்கூட்டரை திருப்பினார்.

அப்போது குன்றத்தூர் நோக்கி வேகமாக வந்த கார், ஸ்கூட்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூரம் தூக்கி வீசப்பட்ட லோகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர், காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பிச்சென்றார்.

இந்த விபத்து காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லோகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com