

இதனையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் உமாசங்கரி ஆந்திரா செல்லும் சூளூர்பேட்டை மின்சார ரெயிலில் சோதனையிட்டார். அப்போது பயணிகள் அமரும் சீட்டின் கீழ் 38 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி மூட்டைகளை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்து பொன்னேரி தாசில்தார் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்.