

சென்னை,
தமிழக சிறைகளில் 2-வது அலை கொரோனா தாக்குதலில் 12 சிறை ஊழியர்கள் பலியானார்கள். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 37 ஊழியர்கள், ரிமாண்டு கைதிகள் 26 பேர் மற்றும் தண்டனை கைதி ஒருவர் சிகிச்சையில் உள்ளனர்.
சிறைத்துறை இயக்குனர் சுனில்குமார் சிங் அறிவுறுத்தலின்படி தமிழக சிறைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பு முகாம்கள் மூலம் நடந்து வருகிறது. தகுதியான சிறைத்துறை ஊழியர்கள் மற்றும் தண்டனை கைதிகள் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ரிமாண்டு கைதிகளில் 69 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மேற்கண்ட தகவல்கள் சிறைத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.