தஞ்சையில் இருந்து விழுப்புரம், சின்னசேலத்திற்கு தலா 1,250 டன் புழுங்கல்அரிசி சரக்குரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

தஞ்சையில் இருந்து விழுப்புரம், சின்னசேலத்திற்கு தலா 1,250 டன் புழுங்கல்அரிசி சரக்குரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சையில் இருந்து விழுப்புரம், சின்னசேலத்திற்கு தலா 1,250 டன் புழுங்கல்அரிசி சரக்குரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
Published on

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் திருவள்ளூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

2,500 டன் அரிசி

அரவை செய்யப்படுவதால் கிடைக்கும் அரிசி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி நேற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு சொந்தமான பிள்ளையார்பட்டி, சென்னம்பட்டி, இரும்புத்தலை, புனல்குளம் உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சரக்கு ரெயிலில் தொழிலாளர்கள் ஏற்றினர்.

மொத்தம் 42 வேகன்களில் 2,500 டன் புழுங்கல்அரிசி ஏற்றப்பட்டது. இதையடுத்து தலா 1,250 டன் அரிசி விழுப்புரம், சின்ன சேலத்திற்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com