பொது வினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி

திருவாரூரில் இருந்து காட்பாடிக்கு பொதுவினியோக திட்டத்துக்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது.
பொது வினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.அதன்படி நேற்று திருவாரூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். இதையடுத்து 1,250 டன் சன்னரக அரிசி பொதுவினியோக திட்டத்திற்காக காட்பாடிக்கு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com