திருவாரூரில் இருந்து ராமநாதபுரத்திற்கு பொதுவினியோக திட்டத்துக்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது

திருவாரூரில் இருந்து ராமநாதபுரத்திற்கு பொதுவினியோக திட்டத்துக்காக சரக்கு ரெயிலில் 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூரில் இருந்து ராமநாதபுரத்திற்கு பொதுவினியோக திட்டத்துக்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல மாவட்டங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.

1,250 டன் அரிசி

அதன்படி நேற்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் 92 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 21 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 1,250 டன் அரிசி பொதுவினியோக திட்டத்துக்காக ராமநாதபுரம் மாவட்டதிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com