கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் கிறிஸ்துபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பணம் வைத்து சூதாடிய விஜயகுமார் (வயது42), நாகராஜ் (54), அண்ணாதுரை (44), ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.300-ஐ பறிமுதல் செய்தனர்.

அதே போல் கெலமங்கலம் போலீசார் குந்துமாரணப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடிய தேவராஜ் (38), கிருஷ்ணமூர்த்தி (40), கனகராஜ் (37), சீனிவாசன் (33), வெங்கடேஷ் (39), பேட்டராயன் (35) ஆனந்த் (39) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.

ஊத்தங்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லக்கம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடிய ஜோதிபாஸ் (30), வினோத்குமார் (28), ராமசாமி (52) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com