ராணுவ வீரர் வீட்டில் 17 பவுன் நகை, ரூ.2½ லட்சம் கொள்ளை

ஆர்.கே. பேட்டை அருகே முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் புகுந்து 17 பவுன் தங்க நகைகள், ரூ.2½ லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ராணுவ வீரர் வீட்டில் 17 பவுன் நகை, ரூ.2½ லட்சம் கொள்ளை
Published on

முன்னாள் ராணுவ வீரர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர் (வயது 35), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி லட்சுமி (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 6-ந் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றார்.

இந்த நிலையில் அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக நேற்று அக்கம்பக்கத்தினர் அவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

இதனால் பதறியடித்து வந்த தனசேகர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com