ரவுடியை கொலை செய்த 2 பேர் கைது

வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து ரவுடியை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரவுடியை கொலை செய்த 2 பேர் கைது
Published on

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே உள்ள மணவெளி காசிவிசுவநாதர் நகரை சேர்ந்தவர் மதன் (வயது 20). ரவுடியான இவர், மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மதன் மோட்டார் சைக்கிளில் ஆரியபாளையம் அரசு சாராய ஆலை எதிரே வந்து கொண்டிருந்தார். அவரை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல், திடீரென்று மதனை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த கும்பல், அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. அவர் இறந்ததை உறுதி செய்த பிறகே அந்த அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையில் மதனுக்கும், அதே பகுதியை சேர்ந்த வேலு (21) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதையொட்டி வேலு தனது நண்பர்களுடன் சேர்ந்து மதனை தீர்த்துக் கட்டியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பதுங்கி இருந்த வேலு மற்றும் அவரது நண்பர் ரவுடியான கட்டவிஜி (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com