வேடசந்தூர் அருகே கார் மோதி 2 பேர் பலி

வேடசந்தூர் அருகே கார் மோதி 2 பேர் பலியாகினர்.
வேடசந்தூர் அருகே கார் மோதி 2 பேர் பலி
Published on

வேடசந்தூர்:

எரியோடு அருகே உள்ள குண்டாம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 59). கூலித்தொழிலாளி. இவர், வேடசந்தூர் அருகே தண்ணீர்பந்தம்பட்டியில் உள்ள அரசு உர தொழிற்சாலைக்கு நேற்று இரவு சென்றார்.

பின்னர் தொழிற்சாலை முன்பு நின்று கொண்டிருந்த எரியோட்டை சேர்ந்த சந்திரசேகரன் (45) என்பவருடன் பழனிசாமி பேசி கொண்டிருந்தார். அப்போது எரியோட்டில் இருந்து வேடசந்தூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று, அவர்கள் 2 பேர் மீதும் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பழனிசாமி பரிதாபமாக இறந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சந்திரசேகரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரசேகரன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com