தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர்.
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
Published on

தேனி:

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 319 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 76 பேர் நேற்று குணமடைந்தனர். தற்போது 441 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த தேனி பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர், 67 வயது மூதாட்டி ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 493 ஆக அதிகரித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com